English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

விலையிடல் முகாமைப் பிரிவு

சமூக வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத்தெனக் கருதப்படும் பொருட்கள் அல்லது சேவையானது சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் செயற்படும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சரினால் அத்தகைய பொருளானது, விதித்துரைக்கப்பட்ட பொருளாக விதித்துரைக்கப்படலாம் என்பதுடன் அத்தகைய பொருளானது இலங்கை அரசாங்க வர்த்தமானியில் விதித்துரைகப்பட்ட பொருளாக பிரசுரிக்கப்படுவதுடன் அவ்வாறு விதித்துரைக்கப்பட்ட பொருளின் விலையினை அதிகாரசபையின் முன் அனுமதியின்றி அதிகரிக்க முடியாது. ஏதேனும் விலை மீளாய்வு தொடர்பான விலை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்வதற்கு 30 நாட்கள் வழங்கப்படுவதுடன் குநித்த தீர்மானமானது உரிய விண்ணப்பதார கம்பனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரியினால் சமர்ப்பிக்கப்படும் ஆதரவு ஆவண ரீதியிலான சான்றுப்படுத்தலினை உசாத்துணை செய்வதன் மூலம் விதித்துரைக்கப்பட்ட பண்டமொன்றின் விலை மீளாய்வுகான விண்ணப்பமொன்று கொண்டிருக்கும் கிரய கட்டமைப்ப்னை பரிசோதனை செய்து அதிகாரசபைக்கு பரிந்துரைகளை வழங்குவது விலையிடல் முகாமைப்பிரிவின் முக்கிய தொழிற்பாடாகும். இப்பிரிவானது, கேள்வி மற்றும் நிரம்பல் காரணிகளினால் விலைத்தளம்பல்கள் ஏற்படுகின்றபோதெல்லாம் விலைகளைக் குறைப்பதற்கு அல்லது நடைமுறை மட்டங்களில் அவற்றினை நிலையாகப் பேணும் பொருட்டு இறக்குமதி தீர்வை மாற்றங்கள் உதவு தொகைகள், தள்ளுபடிகள் போன்ற பிசுக்கால் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் உசாத்துணை மேற்கொள்கின்றது.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதிகாரசபையினால் அங்கீகாரமளிக்க்ப்படும் விலைகள் பண்டத்திற்கு பண்டம் வேறுபடும். விலையினை பரிசோதனை செய்வதன் நோக்கம், விலைகள் கட்டுக்கடங்காமல் கண்டபடி அதிகரிக்கவில்லையென்பதனை உறுதிப்படுத்துவதேயாகும். விலையிடல் முகாமைப் பிரிவின் நோக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதில் போட்டியினை ஏற்படுத்துவதன் லம் நியாயமான விலையினை நடைமுறைப்படுத்தும், வழிகாட்டும் காரணியாக விளங்குவதேயாகும்.

இப்பிரிவானது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஆய்வு செய்வதுடன் விலையிடல் கொள்கைகள் தொடர்பில் அதிகாரசபைக்கு பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றது. இப்பிரிவானது, சட்டத்தின் 14 ஆம் பிரிவின் நியதிகளின்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கிடையில் டன்படிக்கைகளினை மேற்கொள்ளும் போது, உற்பத்தி, வடிவமைப்பு, விலைப் போக்கு, சந்தை நிலைமைகள், சர்வதேச விலைகள் போன்றவற்றினை ஆய்வு செய்த்தன் பின்னர் விலை தொடர்பான பரிந்துரையினை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை தொடர்பில் வினைத்திறன் ஆய்வுகளை மேற்கொள்வது இப்பரிவின் முக்கிய தொழிற்பாடுகளில் ஒன்றாகும்.

அதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுக்கின்ற தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவர் அதிகாரசகைகு விண்ணப்பித்தல் வேண்டும்.

விலைப் பொறிமுறை

விலைப்பொறிமுறையினை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாஅஅ சட்டத்தினால் அதிகாரசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்

(அ) பிரிவு 14 – பொருட்களின் ஆகக்கூடிய விலையினை வழங்குவதற்கான உடன்படிக்கை

அதிகாரசபையானது,
  • ஏதேனும் பொருட்களின் ஆகக்கூடிய விலை
  • விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பொருட்களின் நியமங்கள் மற்றும் மாதிரிகள்
  • தயாரிப்பு, இறக்குமதி, வழங்கல், களஞ்சியப்படுத்துதல், விநியோகம் போக்குவரத்து, சந்தைப்படுத்தல் மற்றும் பொருட்களை லேபலிடுதல் அல்லது விற்பனை செய்தல்
போன்றவற்றினை வழங்குவதற்கு எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரி அல்லது ஏதேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரிகள் சங்கத்துடன் எழுத்துமூலமான உடன்படிக்கையினை மேற்கொள்ளலாம்.
 
(ஆ) பிரிவு 18 – விதித்துரைக்கப்பட்ட பொருட்களின் விலை மீளாய்விற்கான எழுத்து மூல முன் அனுமதி

ஏதேனும் பொருள் அல்லது சேவையானது சுக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது அல்லது அதன் ஒரு பகுதி என அமைச்சர் கருதுவாராயின், அமைச்சர் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து அத்தகைய பொருள் அல்லது சேவையானது விதித்துரைக்கப்பட்ட அத்தகைய பொருள் அல்லது சேவையானது, வித்துரைக்கப்ட்ட பொருட்கள் அல்லது செவைகள் என் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்.

வியாபாரிகள் எவரேனும், பாஅஅ சட்டத்தின் பிரிவு 18(1) இன் கீழ் ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் சில்லறை அல்லது மொத்த விற்பனை விலையினைத் தீர்மானிக்க முடியாது.
 
(இ) பிரிவு 19 மற்றும் 20 – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் படியான ஆகக்கூகூடிய சில்லறை விலையினை நிர்ணயித்தல்

தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவரினால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படாமை அல்லது சேவைகள் அளிக்கப்படாமை பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமிடத்து, அத்தகைய விடயத்தினை புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேரவைக்கு குறிப்பீடு செய்யலாம்.

20(4) ஆம் பிரிவின் கீழ் பேரவையின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும், அதிகாரசபையானது ஆகக்கூடிய சில்லறை விலையினை நிர்ணயிப்பதற்கு வர்த்தமானியில் கட்டளையொன்றினைப் பிறப்பிக்கும்.

எவரேனும் தயாரிப்பாளர் அல்ல்து வியாபாரி ஒருவர் விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் அல்லது சேவையின் விலையினை அதிகாரசபையின் முன் அங்கீகாரமின்றி அதிகரிக்க முடியாது. அதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெறுவதற்கு விண்ணப்பதாரி அதிகாரசபைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
புதுப்பிக்கப்பட்டது: 13-03-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.