பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எதிராளி நியூ சண் டிரேடிங் தனியார் லிமிட்டட்
இந்த வழக்கானது நியூ சண் டிரேடிங் தனியார் லிமிட்டடிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட டெல் மடிக் கணனியானது அதன் உத்தரவாத காலத்தினுள் ஏற்பட்ட பழுதுகள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதாகும்.
சட்டத்தின் 13(1) ஆம் பிரிவின்படி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இரண்டு தரப்புக்களும் அழைக்கப்பட்டு விசாரணையினை மேற்கொண்டிருந்தது. அதன்பின்னர் வெளிவந்த விபரங்களின்படி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 13(4) ஆம் பிரிவின் படி, மடிக் கணனியினைக் கொள்வனவு செய்த பாவனையாளருக்கு ஏற்பட்ட செலவினைத் திருப்பி வழங்குமாறு குறித்த வியாபாரிக்கு கட்டளையிட்டது.
எவ்வாறாயினும், குறித்த வியாபாரியானவர் மேற்குறித்த கட்டளையினை புறக்கணித்தமையினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது சட்டத்தின் 13(6) ஆம் பிரிவின்படி குறித்த கட்டளை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கையொன்றினை முன்வைத்தது. அதற்கிணங்க, நீதிமன்றத்தினால் அக்குறித்த வழக்கானது 2016.05.05 ஆம் திகதியன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் எதிராளி ருபா.79,000/- இனை மடிக் கணனியினைக் கொள்வனவு செய்தவருக்கு வழங்க வேண்டுமென்றும் குறித்த பாதிக்கப்பட்ட தரப்பானது பழுதுகளுடன் கூடிய அத்தகைய மடிக் கணனியினை மேற்குறித்த விற்பனையாளருக்கு மீளவும் கையளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டது.
பாவனையாளர்அலுவல்கள்அதிகாரசபையானது, வெசாக் பண்டிகையின் போது அலங்காரத் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சார உபகரணம், மின்குமிழ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பாவனையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தவிசாளர் கலாநிதி. லலித் செனவீர அவர்கள், வெசாக் பண்டிகை காலப்பகுதியில் தரமல்லாததும் உத்தரவாதமில்லாதுமான மின்சார உபகரணங்கள், வயர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களினை விற்பனை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் காபணப்படுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.
அவர் வெசாக் பண்டிகையின் போது அலங்காரத் தேவைகளுக்கான மின்சாரப் பொருட்கள் மற்றும் அவை சாரந்த துணைப் பொருட்களினைக் கொள்வனவு செய்யும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
அனைத்து மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்களினையும் விற்பனை செய்யும் போது அவற்றின் அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வழங்குனர்களும் குறித்த பொருட்கள் விற்பனை செய்யயப்படும்அல்லது கொள்வனவாளருக்கு அத்தகைய பொருட்கள் உரிமையாகும் திகதியிலிருந்து ஆகக் குறைந்தது ஆறு மாத காலப்புதிக்குக் குறையாத உத்தரவாத காலப்பகுதியினைக் கொண்டிருப்பதனையும் அத்தகைய பொருட்களின் உத்தரவாதச் சான்றிதழ்களின் நிபந்தனைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதனையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
இது தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 011-7755481 அல்லது 1977 எனும் அதிகாரசபையின் தொலைபேசி இலக்கங்களினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறியத்தருமாறு பொதுமக்களைக் கேட்டு்க் கொள்கின்றது.
கலாநிதி.லலித் என்.செனவீர,
தவிசாளர்
පසුගිය දිනවල ප්රදේශ කිහිපයක වෙලදසල්වලට පැමිණි අනන්යතාවය නොදන්නා පුද්ගලයින් ඔවුන් පාරිභෝගික කටයුතු පිලිබඳ අධිකාරියේ නිලධාරීන් බව ප්රකාශකරමින් වෙළදසැල් පරික්ෂාකිරීම් සිදුකර බියගන්වා මුදල් ඉල්ලා සිටි බවට පාරිභෝගික කටයුතු පිළිබද අධිකාරිය වෙත තොරතුරු ලැබී ඇත.
පාරිභෝගික කටයුතු පිලිබඳ අධිකාරියේ විමර්ශන නිලධාරීන් විසින් පමණක් වෙළදපොල වැටලීම සහ විමර්ශන සිදුකරනු ලබන අතර , ඔවුන් සතුව ඇති රාජකාරි හැදුනුම්පත ඉදිරිපත්කිරිමෙන් පසුව තම අනන්යතාවය හෙළිකර රාජකාරි කටයුතු සිදුකරනු ලබයි . එමෙන්ම එම රාජකාරි සිදුකිරීම සදහා එම නිලධාරීන් වෙත බලය පැවරීමක් ලබා දී ඇත. තවද රාජකාරි කටයුතුවලින් පසුව එම රාජකාරියට අදාලව අධිකාරියේ දුරකථන අංක සහ ලිපිනය සහිත ලිඛිත සටහනක් වෙළදසල වෙත නිලධාරීන් විසින් නිකුත්කරනු ලබයි . පාරිභෝගික කටයුතු පිලිබඳ අධිකාරිය මගින් සිදුකරනු ලබන රාජකාරි කටයුතුවලදී ඔබට යම් සැකයක් හෝ ගැටළුවක් ඇති වුවහොත් එම අවස්ථාවේදීම ඔවුන් සම්බන්ධව විමසීමක් සිදුකර එම තොරතුරු සනාථ කරගැනීමට කටයුතුකරන ලෙස අධිකාරිය විසින් වෙළද ප්රජාවගෙන් ඉල්ලා සිටී .
එමෙන්ම 0771088922 දුරකථන අංකය මගින් ඔබ වෙළදසැල වෙත පැමිණෙන අය සම්බන්ධව තහවුරු කරගැනීමට හැකි අතර එහිදී වෙනත් පුද්ගලයින් ඔබ වෙළදසැල වෙත පැමිණ ඇති බවට සැකයක් මතුවුවහොත් ඉහත අංකය හෝ 0771088921 දුරකථන අංකය වෙත එම තොරතුරු ලබාදිය හැක. තවද වෙළද ප්රජාව / ව්යාපාරිකයින් හා ව්යාපාරික ප්රජාව, කිසිදු හේතුවක් මත හෝ එම අවස්ථාවලදී කිසිදු පුද්ගලයෙකුට මුදල් ලබා නොදෙන ලෙසත් එවැනි වංචනික පුද්ගලයින් සහ හෝ ක්රියාවන් පිලිබදව ලගම ඇති පොලිස් ස්ථානය සහ පාරිභෝගික කටයුතු පිළිබද අධිකාරි කාර්යාලය දැනුවත් කරන ලෙසත් සියළුම ව්යාපාරිකයින්ගෙන් අධිකාරිය ඉල්ලා සිටී .
ව්යාපාරික සංගම් මගින් තම සාමාජිකයන්, නගරයේ සහ වෙනත් ප්රදේශවල සිටින ව්යාපාරිකයින් ද මේ සම්බන්දව දැනුවත් කරන ලෙසත් මෙවැනි ව්යාජ ලෙස පෙනීසිටින පුද්ගලයින් පිලිබදව විමසිලිමත් වන ලෙසත් තවදුරටත් දැනුම් දේ.
මේ සම්බන්දව ව්යාපාරික ඔබට තවදුරටත් තොරතුරු ලබාගැනීමට අවශ්යනම් ඔබගේ අනන්යතාවය හෙළිකර ඉහත දුරකථන අංක මගින් විමසීම් කරන ලෙසද පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය ඉල්ලා සිටි.
සභාපති
පාරිභෝගික කටයුතු පිළිබද අධිකාරිය